ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு "Y" பிரிவு பாதுகாப்பு - பசவராஜ் பொம்மை

0 2442
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் வந்த நிலையில், அவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் வந்த நிலையில், அவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கர்நாடகா அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவ்ஹித் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கொலை மிரட்டல் வந்தது குறித்து தீர விசாரிக்குமாறு டி.ஜி.பி., ஐ.ஜி. மட்டத்திட்டலான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments